Friday, June 16, 2017

கடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா

அமீரகம் வந்து 12 ஆண்டுகள் நிறைவடைய போகிறது இதில் ஊருக்கான மூன்று பயணங்கள் தந்தை மற்றும் உடன்பிறப்புகளின் இழப்பிற்காக. இறைவன் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் நற்கிரியைகளை பொருந்திகொண்டு அவர்களுக்கு சுவனத்தை அருள் புரியட்டும்.
மனம் கனக்கிறது அமைதி அடைய மறுக்கிறது 4 உடன்பிறப்புகளுடன் பிறந்த நான் இன்று அனைவரையும் இழந்து பெற்றோரையும் இழந்து தனியாக .ஓர் உடன்பிறப்பை பார்த்தது இல்லை மற்ற மூவரும் வளர்ந்து ஒன்றாக திரிந்தோம் இன்று அவர்களும் இல்லை.

சந்தோசத்தையும் துக்கத்தையும் பெற்றோருக்கு அடுத்து உடன்பிறப்புகளுடன் மட்டுமே அன்னியோன்யமாக பகிர்ந்திட முடியும் அதற்கடுத்து ஆத்மார்த்தமான நட்புகளுடன் எனக்கு இந்த இரண்டாவது மட்டுமே இன்று சாத்தியம். ஆத்மார்த்தமான நட்புகளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்திட கடமையானவன் நான். கடினமான சூழல்களில் எனது எண்ணங்களோடு பயணித்த அவர்களுக்கு உண்மையானவனாக நான் என்றும் இருந்திட வேண்டும் அதற்காக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
ஓர் நண்பனிடம் கேட்டேன் நான் சுகமில்லாமல் ஊரில் இருந்தால் என்னை பார்த்திட வருவாயா என்று சில நாட்களுக்கு முன்பு நடந்த இன்னொரு சம்பவத்தை சொல்லி கேட்டேன், அவனது கண்களில் நீர் கோர்த்தது நீ நன்றாக இருப்பாய் அப்படி சொல்லாதே இறைவன் அருள் புரிவான் என்றான். பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பிரார்த்தனைகளே இன்றுவரை எனது பலம். அந்த பலத்தோடு நான் பயணித்து எனது கடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா என்று இந்த புனிதமான மாதத்தில் இறைஞ்சுகிறேன். இந்த பிரார்த்தனைகளில் குடும்பத்தினர், உற்றார் , உறவினர் மற்றும் நண்பர்களும் உண்டு . சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கட்டும் உலகம் முழுவதும்.



Sheik Mohamed Sulaiman

No comments: